விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
விழுப்பொரு ளே! உன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச் செய்தானே!
வண்திருப் பெருந்துறை யாய்வழி அடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
கடலமு தே! கரும்பே! விரும் படியார்
எண்ணகத் தாய் உலகுக்குயி ரானாய்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
வானுலகில் உள்ள தேவர்களும் நெருங்கவும் முடியாத மேலான மெய்ப்பொருளே! இந்த மண்ணுலகில் வந்து உன்னுடைய அடிமைகளாகிய எங்களை வாழச் செய்தவனே! வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் அமர்ந்தவனே! பரம்பரை அடிமைகளாகிய எங்களுடைய கண்களுக்குள்ளே நின்று, காணும் பொருளில் எல்லாம் நின் வடிவம் காட்டிக் களிப்பை வழங்கித் தித்திக்கின்ற தேனே! பாற்கடலில் தோன்றிய அமுதமே! நெஞ்சில் இனிக்கும் கரும்பே! அன்பு செய்யு தொண்டர்களின் எண்ணத்துள் நிறைந்தவனே! உலகம் அனைத்துக்கும் உயிரானவனே! எம்பெருமானே! பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக!
No comments:
Post a Comment