பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டரும் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
பந்தனை வந்தறுத் தார்அவர் பலரும்
மைப்புறு கண்ணியர்; மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா!
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
இப்பிறப் பறுத்தெமை ஆண்டரும் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
மனத்தின் அலைச்சல் அடங்கி, உன்னடி நாடி நிற்கின்ற உன் அன்பர்கள் உன்னை வணங்குகின்றனர். அவர்களுள் பலர் பற்று விட்ட பெண்கள். அவர்களும் சாதாரணமானவர்கள் போலவே உன்னை வணங்கி மகிழ்கிறார்கள். செந்தாமரை மலர்களும் குளிர்ந்த நீர் நிறைந்த பசுமையான வயல்களும் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே! பார்வதியின் நாயகனே! எங்கள் பிறவித் துன்பத்தை அறுத்தெறிந்து அருள் புரியப் பள்ளி எழுந்தருள்வாய்!
மனத்தின் அலைச்சல் அடங்கி, உன்னடி நாடி நிற்கின்ற உன் அன்பர்கள் உன்னை வணங்குகின்றனர். அவர்களுள் பலர் பற்று விட்ட பெண்கள். அவர்களும் சாதாரணமானவர்கள் போலவே உன்னை வணங்கி மகிழ்கிறார்கள். செந்தாமரை மலர்களும் குளிர்ந்த நீர் நிறைந்த பசுமையான வயல்களும் சூழ்ந்த திருப்பெருந்துறையில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே! பார்வதியின் நாயகனே! எங்கள் பிறவித் துன்பத்தை அறுத்தெறிந்து அருள் புரியப் பள்ளி எழுந்தருள்வாய்!
No comments:
Post a Comment