இன்னிசை வீணையர், யாழினர், ஒருபால்;
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர் அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர், ஒருபால்;
தொழுகையர் அழுகையர், துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்;
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்! பள்ளி எழுந்தரு ளாயே!
பொருள்:
சிலர் வீணை, யாழ் போன்ற இசைக்கருவிகளுடன் இன்னிசை எழுப்புகின்றனர். சிலர் ரிக்வேதம் போன்ற தோத்திரங்களால் துதிக்கின்றனர், தொடுத்த மாலைகளுடன் சிலர் காத்து நிற்கின்றனர், அன்பு மேலீட்டால் சிலர் தொழுதவண்ணமும் சிலர் அழுதவண்ணமும் நிற்கின்றனர்; மகிழ்ச்சி மேலீட்டால் சிலரது தொழுத கைகள் தன் வசமிழந்து துவண்டு விட்டன. திருப்பெருந்துறைத் தலைவனே! இவர்களுக்கு அருளவும் என்னை ஆட்கொள்ளவும் பள்ளி எழுந்தருள்வாய்!
சிலர் வீணை, யாழ் போன்ற இசைக்கருவிகளுடன் இன்னிசை எழுப்புகின்றனர். சிலர் ரிக்வேதம் போன்ற தோத்திரங்களால் துதிக்கின்றனர், தொடுத்த மாலைகளுடன் சிலர் காத்து நிற்கின்றனர், அன்பு மேலீட்டால் சிலர் தொழுதவண்ணமும் சிலர் அழுதவண்ணமும் நிற்கின்றனர்; மகிழ்ச்சி மேலீட்டால் சிலரது தொழுத கைகள் தன் வசமிழந்து துவண்டு விட்டன. திருப்பெருந்துறைத் தலைவனே! இவர்களுக்கு அருளவும் என்னை ஆட்கொள்ளவும் பள்ளி எழுந்தருள்வாய்!
No comments:
Post a Comment