முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?
பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளியபரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!
ஆரமு தே!பள்ளி எழுந்தருள் வாயே!
மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?
பந்தணை விரலியும், நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளியபரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!
ஆரமு தே!பள்ளி எழுந்தருள் வாயே!
பொருள்:
எங்கும் நிறைந்த அமுதமே! அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்? இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற விரல்கள் உடைய உமாதேவியோடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம்பொருளே! சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
எங்கும் நிறைந்த அமுதமே! அனைத்துக்கும் முற்பட்ட முதலும், நடுவும், முடிவும் ஆனவனே! பிரமன், திருமால், உருத்திரன் ஆகிய மூவரும் உன்னை அறிய முடிந்தவர் அல்லர். வேறு யார் அறிவர்? இத்தகைய அருமையுடைய நீ, பந்து வந்து அணைகின்ற விரல்கள் உடைய உமாதேவியோடும், உன் அடியவர்களின் பழைய குடிசைதோறும் எழுந்தருளியிருக்கிறாய்! பரம்பொருளே! சிவந்த தழல் போன்ற உன் திருமேனிக் காட்சி தந்து, திருப்பெருந்துறையில் நீ அமர்ந்த திருக்கோயிலையும் காட்டி, என் குருமூர்த்தியாக அந்தண வேடத்தையும் காட்டி, வலிய வந்து, என்னை அடிமையாக ஏற்றாய்! பள்ளி நீங்கி எழுந்தருள்வாயாக!
No comments:
Post a Comment